நூல் பற்றி:
அகத்திய மகரிஷி சித்தர்கள் கண்டறிந்த எல்லா வித்தைகளையும் மறைப்பில்லாமல் தெளிவாக கூறியவர்களில் முதன்மையானவர். மேலும் தான் சிவமான சிகாரம் எனப்படும் மகாகாரண சரீரம் அடைந்தாலும் தான் உதித்த மனிதகுலம் அந்த நிலை அடையவேண்டும் என்று பல வழிமுறைகளை மனிதனிற்கு ஏற்படுத்தி வைத்து இன்றும் தனது மகாகாரண சரீரத்தில் இருந்து தன்னை எண்ணுபவர்களுக்கு உதவிடும் அருட்கொடை வள்ளல்.
அகத்திய மகரிஷி தனது ஞானத்தை சுருக்கி முப்பது பாடல்களில் அகத்தியர் ஞானம் முப்பது ஆக தந்ததை தற்காலத்தவர்கள் விளங்கி கொள்ளும் படி குரு உபதேச பாவத்தில் அனைவருக்கு விளக்கி கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்
ஆசிரியர் பற்றி:
ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் குடும்ப வழி அகத்திய மகரிஷியை குருவாகக் கொண்டு நுவரெலியா காயத்ரி பீடம் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடம் காயத்ரி தீக்ஷையும் பல்லாண்டுகாலம் உடனிருந்து குருசேவை செய்து காயத்ரி சாதனையும், பின்னர் விசாகப்பட்டினம் தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரிடம் கௌல சம்பிரதாய ஸ்ரீ வித்யா பூர்ணாபிஷேகமும் பெற்றவர். இல்லறத்திலிருந்துகொண்டு தேவி உபாசனையின் மூலம் யோக சாதனை செய்து வருகிறார். சித்தர்பாடல்களின் யோக ஞான விளக்கத்தினை தனது தியானசாதனை அனுபவத்தின் மூலம் எழுதி வருகிறார். கற்க விருப்பமுள்ள சாதகர்களுக்கு தனது அறிவினையும், அனுபவத்தினையும் எழுத்துமூலமும், கலந்துரையாடல்கள் மூலமும் பகிர்ந்து வருகிறார். தனது இளமானி, முதுமானிப் பட்டப்படிப்பை சூழலியல் விஞ்ஞானத்தில் பூர்த்தி செய்துள்ளார். பல்தேசியக்கம்பனியில் துணை இயக்குனராக பணியாற்றி 2018ம் ஆண்டு பணியைத் துறந்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஆய்வும், திட்டங்களும் முன்னெடுத்து வருகிறார்.